search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துக்குள்ளான காரையும், பலியான ரீமாராஜ லெட்சுமியையும் படத்தில் காணலாம்.
    X
    விபத்துக்குள்ளான காரையும், பலியான ரீமாராஜ லெட்சுமியையும் படத்தில் காணலாம்.

    வல்லநாடு அருகே கார் விபத்தில் பெண் வக்கீல் பலி

    வல்லநாடு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் பெண் வக்கீல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி காமராஜர் சாலையை சேர்ந்தவர் அரிபத்பநாதன் (வயது 35). இவர் தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ரீமா ராஜலெட்சுமி (30). இவர் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு தருண் சூரியன் (8) மகன் என்ற உள்ளான்.

    அரிபத்பநாதனின் நண்பர் அந்தோணியார்புரம் ராம அரவிந்த் (22). இவர் நெல்லை மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் எம்.ஏ படித்து முடித்துள்ளார். அதற்கான சான்றிதழை வாங்க நேற்று ராமஅரவிந்தும், ரீமாராஜலெட்சுமியும் காரில் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு வந்தனர். காரை ரீமாராஜ லெட்சுமி ஓட்டி வந்தார். அவர்கள் சான்றிதழை வாங்கி விட்டு மதியம் 3 மணிக்கு தூத்துக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    அவர்களது கார் வல்லநாடு மலையடிவாரத்தில் வரும் போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. பின்னர் அருகில் உள்ள பாறையில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ரீமா ராஜலெட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். ராம அரவிந்த் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து தகவல்அறிந்த முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து படுகாயமடைந்த ராம அரவிந்த்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரீமா ராஜலெட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
    Next Story
    ×