search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை தினகரன் அழிக்கப் பார்க்கிறார்: வசந்தி முருகேசன் எம்.பி.
    X

    தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை தினகரன் அழிக்கப் பார்க்கிறார்: வசந்தி முருகேசன் எம்.பி.

    டி.டி.வி. தினகரன் தி.மு.க.வுடன் சேர்ந்து அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த ஆதரவு குறித்து வசந்தி முருகேசன் எம்.பி. கூறினார்.
    நெல்லை:

    டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.யான வசந்தி முருகேசன் இன்று திடீரென தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இது குறித்து வசந்திமுருகேசன் எம்.பி. கூறியதாவது:-

    அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட கட்சி அ.தி.முக. இந்த கட்சியை டி.டி.வி.தினகரன் பெரிய கட்சியாக வளர்ப்பார் என்று அவர் பின்னால் சென்றேன். ஆனால் அவர் தி.மு.க.வுடன் சேர்ந்து கட்சியை அழிக்கப் பார்க்கிறார்.

    இந்த கட்சியும், ஆட்சியும் எனக்குப்பிறகும் 100 ஆண்டுகள் இருக்கும் என்று ஜெயலலிதா கூறினார். அதன் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சியை வளர்க்க பாடுபட்டு வருகிறார்கள்.



    கட்சியையும், கொடியையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே நான் அவர்கள் இருவரையும் இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்தேன். இந்த அரசு ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. எனது தொகுதி மக்களுக்கும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க பாடுபட்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×