search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எட்டயபுரம் அருகே திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை
    X

    எட்டயபுரம் அருகே திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் தற்கொலை

    தாய் திருமணம் செய்து வைக்காததால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    எட்டயபுரம்:

    எட்டயபுரம் அருகே உள்ள மேல ஈராலை சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது 25). இவர் சொந்தமாக சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வந்தார். இவரது தந்தை சிறுவயதிலே பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தாய் பார்வதியின் பராமரிப்பில் இருந்தார்.

    இந்த நிலையில் சுப்புராஜ் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தாய் பார்வதியிடம் கேட்டு வந்தார். அதற்கு அவர் இன்னும் 2 ஆண்டு கழிக்கட்டும் என்றாராம். இதனால் சுப்புராஜ் தாயிடம் தகராறு செய்து வந்தார். தொடர்ந்து திருமணம் தாமதம் ஆனதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுப்புராஜ் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சுப்புராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி எட்டயபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×