search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமயநல்லூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை
    X

    சமயநல்லூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை கொள்ளை

    சமயநல்லூர் அருகே வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாடிப்பட்டி:

    சமயநல்லூர் அருகே உள்ள சிறுவாலை நடுத்தெருவை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 30). இவர் சென்னையிலுள்ள வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று அருள் பிரகாஷ் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டு மீண்டும் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் அவரது வீட்டின் மாடிக்கதவு திறந்திருப்பதாக உறவினர்கள் தகவல்கொடுக்கவே அவர் வீட்டின் முன்பக்க பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்தது.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து துணி சிதறியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். லாக்கரில் இருந்த 10 பவுன் தங்கசெயின், 2 பவுன் டாலர் ஆகியவை திருடுபோனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1.20 லட்சமாகும்.

    இது குறித்து அருள் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயமணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×