என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிரிக்கெட் மட்டை தாக்கியதில் உயிரிழப்பு: மாணவர் மரணத்தில் விசாரணை தேவை - ஜி.கே.வாசன்
Byமாலை மலர்21 Sep 2017 4:28 AM GMT (Updated: 21 Sep 2017 4:28 AM GMT)
கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி தாக்கியதில், நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் விக்னேஸ்வரன் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனைக்குரியது.
உயிரிழந்த மாணவர் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். பள்ளி பருவத்தில் பல்வேறு கனவுகளுடன் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒரு போதும் நிகழக் கூடாது.
இச்சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்தை போக்குவதற்கு விசாரணை நடத்தி உண்மை காரணத்தை வெளிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை நழுவி தாக்கியதில், நாமக்கல் மாவட்டம் விட்டம்பாளையம் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் விக்னேஸ்வரன் உயிரிழந்து விட்டார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. வேதனைக்குரியது.
உயிரிழந்த மாணவர் விக்னேஸ்வரன் குடும்பத்துக்கு த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். பள்ளி பருவத்தில் பல்வேறு கனவுகளுடன் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒரு போதும் நிகழக் கூடாது.
இச்சம்பவம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகத்தை போக்குவதற்கு விசாரணை நடத்தி உண்மை காரணத்தை வெளிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X