search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது
    X

    கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது

    கரூர் அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    வேலாயுதபாளையம்:

    கரூர் மண்மங்கலம் அருகே காதப்பாறை என்.எஸ்.ஆர். நகரைச் சேர்ந்தவர் ராபின்சேவியர் (35), என்பவர் தவுட்டுப்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனத்தை தடுத்து நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார்.

    இதுகுறித்து பொது மக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா பிரபு விசாரணை நடத்தி ராபின்சேவியர் கைது செய்தார்.
    Next Story
    ×