என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவி: கலெக்டர் தகவல்
Byமாலை மலர்20 Sep 2017 2:42 PM GMT (Updated: 20 Sep 2017 2:42 PM GMT)
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரூ.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொது மக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, காவல்துறை நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, பசுமைவீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர், விதவை உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 274 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 21 மனுக்கள் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தாட்கோ திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு மானிய விலையில் வாகனம் வாங்க ரூ.6,26,970 மதிப்பில் வங்கி கடன் உதவித் தொகைக்கான காசோலையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு ரூ.8,25,000 மதிப்பில் உதவித் தொகைக்கான காசோலைகளும், சவுதி அரேபியாவில் பணிபுரிந்த பொழுது மரணம் அடைந்த சக்தி சுப்ரமணியன் என்பவரின் தந்தைக்கு ரூ.3,24,091 மதிப்பில் மரண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொது மக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, காவல்துறை நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, பசுமைவீடு, சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர், விதவை உதவித்தொகை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 274 மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 21 மனுக்கள் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தாட்கோ திட்டத்தின் மூலம் 1 பயனாளிக்கு மானிய விலையில் வாகனம் வாங்க ரூ.6,26,970 மதிப்பில் வங்கி கடன் உதவித் தொகைக்கான காசோலையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 நபர்களுக்கு ரூ.8,25,000 மதிப்பில் உதவித் தொகைக்கான காசோலைகளும், சவுதி அரேபியாவில் பணிபுரிந்த பொழுது மரணம் அடைந்த சக்தி சுப்ரமணியன் என்பவரின் தந்தைக்கு ரூ.3,24,091 மதிப்பில் மரண இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையும் மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X