search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே பெயிண்ட் குடோனில் தீ விபத்து: ரூ.1 கோடி சேதம்
    X

    கோவை அருகே பெயிண்ட் குடோனில் தீ விபத்து: ரூ.1 கோடி சேதம்

    கோவை அருகே பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு சேதம் அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் ரோடு கவுண்டர்மில் பிரிவில் இருந்து உருமாண்டம் பாளையம் செல்லும் சாலையில் உள்ள உழைப்பாளர் வீதியில் தனியாருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

    இங்கு பெயிண்ட் மற்றும் தின்னர் டின்கள் ஆயிரக்கணக்கில் இருப்பு வைத்து மாவட்டம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. குடோனின் ஒரு பகுதி தீப்பற்றி எரிவதை கண்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.

    இதுகுறித்து கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே அங்கிருந்து 3 வண்டிகள் புறப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அணைக்க முடியவில்லை. இதனால் மேட்டுப்பாளையம் மற்றும் இதர பகுதிகளில் இருந்தும் 7 தீயணைப்பு வண்டிகள் வந்தன.

    அதற்குள் குடோனின் பெரும்பகுதி தீ பற்றி கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் வெளியேறிய கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது. அப்பகுதி மக்கள் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த பெரியநாயக்கன் பாளையம் போலீசார், குடோன் அருகே வசித்த மக்களை வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.

    பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் குடோனில் எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு சேதம் அடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு நிலையத்தினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×