search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே பிளஸ்-2 மாணவர் மாயம்
    X

    நெய்வேலி அருகே பிளஸ்-2 மாணவர் மாயம்

    நெய்வேலி அருகே பிளஸ்-2 மாணவர் மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவரை தேடி வருகிறார்கள்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம். இவரது மகன் சஞ்சய்குமார் (வயது17).இவர் நெய்வேலி புதுநகர் 5-வது வட்டத்தில் உள்ள மத்திய கல்வி திட்ட பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    தினமும் மாணவர் சஞ்சய்குமார் சைக்கிளில் பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்தார். கடந்த 18-ந்தேதி காலை வழக்கம் போல் சஞ்சய்குமார் பள்ளி சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் கவலை அடைந்த சிவபிரகாசம் மகனை பல இடங்களில் தேடிப்பார்த்தார். எங்கும் சஞ்சய் குமாரை காணவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் நெய்வேலி டவுன்சிப் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×