என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
மதுரை:
மதுரை அருகே உள்ள நாகமலைபுதுக்கோட்டை இமானுவேல் நகரை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் சிவநிஷாந்த் (வயது 19), கல்லூரி மாணவர்.
சம்பவத்தன்று இவரது தாய் வெளியூர் சென்றுவிட்டு ஆரப்பாளையம் பஸ் நிலையத்துக்கு வந்தார். தாயை அழைத்து செல்வதற்காக சிவநிஷாந்த் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
ஆரப்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவநிஷாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விபத்தில் பலியான சிவநிஷாந்த் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியாமல் சென்று உள்ளார். அதே நேரத்தில் தலைக்கசவத்தை மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் வைத்து சென்றுஉள்ளார். அதை அணிந்து சென்றிருந்தால் உயிர்ப்பலியை தவிர்த்து இருக்கலாம் என மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்