search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
    X

    தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

    விருத்தாசலம் அருகே தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக் கூடத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் தொடக் கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் இப்பள்ளி தலைமை ஆசிரியர் அடிக்கடி பள்ளிக்கு வராமல் விடுப்பில் செல்வதாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இது தவிர மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாட புத்தகங்கள், கல்வி உதவித்தொகை போன்ற பல்வேறு உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

    இது பற்றி அறிந்த மாணவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து விடுமுறை முடிந்து தலைமை ஆசிரியர் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வந்தார். இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், பள்ளிக்கூடத்துக்கு சரியாக வராத தலைமை ஆசிரியரை கண்டித்தும், மாணவர்களுக்கு விரைந்து உதவித்தொகை வழங்க கோரியும், அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

    இது பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி விட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×