என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே வாலிபர் எரித்துக்கொலை?
Byமாலை மலர்19 Sep 2017 2:26 PM GMT (Updated: 19 Sep 2017 2:26 PM GMT)
கரூர் அருகே உடல் கருகி கிடந்த வாலிபர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அரவக்குறிச்சி:
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஐந்து ரோடு தேசிய நெடுஞ்சாலையோரம் இன்று காலை வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தீயில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை.
மர்ம நபர்கள் யாராவது அவரை அடித்துக்கொன்று தீ வைத்து எரித்து விட்டு சென்றிருக்கலாமா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஐந்து ரோடு தேசிய நெடுஞ்சாலையோரம் இன்று காலை வாலிபர் ஒருவரின் பிணம் கிடப்பதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தீயில் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. எப்படி இறந்தார் என்றும் தெரியவில்லை.
மர்ம நபர்கள் யாராவது அவரை அடித்துக்கொன்று தீ வைத்து எரித்து விட்டு சென்றிருக்கலாமா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X