என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை: பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த பார்வையற்ற மாணவிகளுக்கு உதவித்தொகை
Byமாலை மலர்19 Sep 2017 1:52 PM GMT (Updated: 19 Sep 2017 1:52 PM GMT)
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற 3 மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் உதவித்தொகை வழங்கினார்.
சிவகங்கை:
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. பொது மக்களிடமிருந்து கலெக்டர் மனுக்களை பெற்று, மனுக்கள் மீது தீர்வுகாண துறை அலுவலர்களிடம் வழங்கினார்.
வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், ஊனமுற்றோர் உதவித்தொகை, மறு வாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், அங்கன்வாடி சமையலர் பணி கோருதல் போன்ற 367 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.
முதலமைச்சர் தனிப் பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் லதா அறிவுறுத்தினார்.
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் மினி டிராக்டர் மற்றும் பவர்டில்லர் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு சுழற்கலப்பையும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விசை உழுவான் ஆக மொத்தம் ரூ.7,68,600 மதிப்பிலான எந்திரங்களுக்கு ரூ.2,45,000 மானியத்தில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற 3 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம், உயர்கல்வி தொடர மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தில் ரூ.45,000-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் லதா தலைமையில் நடைபெற்றது. பொது மக்களிடமிருந்து கலெக்டர் மனுக்களை பெற்று, மனுக்கள் மீது தீர்வுகாண துறை அலுவலர்களிடம் வழங்கினார்.
வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை கோருதல், வங்கிக் கடன், ஊனமுற்றோர் உதவித்தொகை, மறு வாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள், அங்கன்வாடி சமையலர் பணி கோருதல் போன்ற 367 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.
முதலமைச்சர் தனிப் பிரிவிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் லதா அறிவுறுத்தினார்.
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத்துறையின் சார்பில் மினி டிராக்டர் மற்றும் பவர்டில்லர் 2 பயனாளிகளுக்கும், வேளாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு சுழற்கலப்பையும், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு விசை உழுவான் ஆக மொத்தம் ரூ.7,68,600 மதிப்பிலான எந்திரங்களுக்கு ரூ.2,45,000 மானியத்தில் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பார்வையற்ற 3 மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகம், உயர்கல்வி தொடர மற்றும் ரொக்கப் பரிசு வழங்கும் திட்டத்தில் ரூ.45,000-க்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X