search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மியான்மரில் முஸ்லீம்கள் படுகொலை: முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
    X

    மியான்மரில் முஸ்லீம்கள் படுகொலை: முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்

    முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மியான்மர் நாட்டில் அப்பாவி ரோஹிங்கியா முஸ்லீம்களை கொன்று குவிக்கும் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அருகில் நடந்தது.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மியான்மர் நாட்டில் அப்பாவி ரோஹிங்கியா முஸ்லீம்களை கொன்று குவிக்கும் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அருகில் நடந்தது.

    மாவட்ட தலைவர் முகமது மிஸ்கீன் தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் அப்துல் அஜீஸ், முகமது மீரான் லெப்பை, முகமது அலி ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் அன்சாரி வரவேற்று பேசினார். இதில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கலந்துக் கொண்டு பேசினார்.

    மியான்மர் நாட்டுக்கு எதிரான கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் முகமதுசித்திக், பொருளாளர் அசாருதீன், துணைச்செயலாளர்கள் அரபாத், ஜமால், அப்துல் ரகுமான், சட்சா, மாவட்ட மருத்துவ அணி நிர்வாகி பிர்தவ்ஸ்கான், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அமைப்பு நிர்வாகிகள் குவைத் அன்சாரி, புரைதா பரக்கத் அலி, நகர நிர்வாகிகள் நஜிபுதீன், புகாரி, நெய்னா முகமது மற்றும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.
    Next Story
    ×