என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெருமத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Byமாலை மலர்18 Sep 2017 5:12 PM GMT (Updated: 18 Sep 2017 5:12 PM GMT)
பெருமத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் ஓடைக்குள் பாய்ந்த விபத்தில் வாலிபர் பலியானார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் அருகே உள்ள கீழுமத்தூரைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் ரமேஷ் (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் அக்பர் அலி (30) என்பவருடன் பெருமத்தூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை காண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் கச்சேரி முடிந்ததும் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பெருமத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் பாய்ந்தது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்பர் அலி படுகாயத்துடன் ஓடைக்குள் கிடந்தார்.
இந்நிலையில் கச்சேரி பார்த்துவிட்டு வந்த சிலர், படுகாயத்துடன் கிடந்த அக்பர் அலியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் அருகே உள்ள கீழுமத்தூரைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மகன் ரமேஷ் (வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் அக்பர் அலி (30) என்பவருடன் பெருமத்தூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியை காண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் கச்சேரி முடிந்ததும் இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பெருமத்தூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஓடைக்குள் பாய்ந்தது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்பர் அலி படுகாயத்துடன் ஓடைக்குள் கிடந்தார்.
இந்நிலையில் கச்சேரி பார்த்துவிட்டு வந்த சிலர், படுகாயத்துடன் கிடந்த அக்பர் அலியை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X