என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் 3 வாலிபர்கள் தற்கொலை
தேனி:
கூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி மகன் பார்த்திபன் (வயது27). கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் குணமாகாததால் மனமுடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வருசநாடு வி.பி.தெருவை சேர்ந்தவர் சரவணன் (30). திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. குடி பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த சரவணன் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் ஆசாரிமார் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சுதாகர் (18). கருத்து வேறுபாடு காரணமாக ராஜா, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்ததால் சுதாகர் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்