search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடுகத்தூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ஒடுகத்தூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

    ஒடுகத்தூரில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் அருகே உள்ள ஒடுகத்தூர் பின்னத்தூரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இருவரும் கூலி வேலை செய்கிறார்கள். இவர்களது மகள் ரஞ்சிதா (வயது 17). ஒடுகத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    இந்த நிலையில், மாணவி ரஞ்சிதா நேற்று வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.

    பிறகு, வீட்டில் உள்ள மின் விசிறியில் மாணவி ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர், மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    தகவலறிந்ததும், வேப்பங்குப்பம் போலீசார் விரைந்து வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, வேலூர் அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×