search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் பலி
    X

    மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் பலி

    பாகூர் அருகே கன்னியக்கோவிலில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ்காரரின் கணவர் பலியானார்.

    பாகூர்:

    பாகூர் அருகே சேலியமேட்டை அடுத்த குடியிருப்பு பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் கன்னியக் கோவில் பகுதியில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி காளி. இவர் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் சிவக்குமார் பூஜைக்கு பூ வாங்குவதற்காக கன்னியக் கோவிலில் இருந்து கடலூர் மஞ்சக்குப்பத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சிறிது தூரத்திலேயே அருகில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது இவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே புதுவை பெருமாள் தெருவை சேர்ந்த அரவிந்தன் என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

    இதில் சிவக்குமாரும், அரவிந்தனும் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இன்று அதிகாலை சிவக்குமார் பரிதாபமாக இறந்து போனார். அரவிந்தன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×