search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆனையூரில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை
    X

    ஆனையூரில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

    ஆனையூரில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை ஆனையூர் மலர்நகர் 2-வது தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் பிரவீன் (வயது 33).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளி யூர் சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த 10 பவுன் நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து பிரவீன், கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

    மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனி, சாயப் பட்டறை தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (56).

    சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்புற கதவை உடைத்து ரூ. 8 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பாத்திரங்களை திருடிச் சென்று விட்டனர்.

    இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×