search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    திருமங்கலம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், பெண்ணை கீழே தள்ளி 6 பவுன் நகையை பறித்துச் சென்றனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் இந்திரா காலனியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி மகேசுவரி. நேற்று இவர் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென் றார்.

    அங்கு உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்றுவிட்டு மகேசுவரி வீட்டுக்கு புறப்பட்டார். திருமங்கலம்-சோழவந் தான் சாலையில் அவர் சென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் மகேசுவரி வாகனத்தை இடித்து கீழே தள்ளினர்.

    இந்த சம்பவத்தால் மகேசுவரி நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதனை பயன்படுத்தி அவரை தாக்கிவிட்டு, மகேசுவரி அணிந்திருந்த 2 தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மர்ம வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசில் மகேசுவரி புகார் செய்தார். அதில் 6 பவுன் நகைகளை மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் பறித்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

    திருமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு 10 பவுன் நகை பறிபோனது. இந்த சம்பவங்கள் பெண்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபோன்ற வழிப்பறி, நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்துகின்றனர்.

    Next Story
    ×