என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தவளக்குப்பம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை
பாகூர்:
தவளக்குப்பம் அருகே நல்லவாடு தில்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் மூர்த்திக்கு கடன் ஏற்பட்டது.
மீன்பிடி தொழில் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று மூர்த்தி முயற்சி செய்து வந்த வேளையில் மீன்பிடி தொழிலும் கைகூட வில்லை. இதனால் கடனை அடைக்க முடியாமல் மூர்த்தி சிரமப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்த மூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மாலை வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் தூக்குபோட்டு தொங்கினார்.
உடனே அவரது குடும்பத்தினர் மூர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்