search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தவளக்குப்பம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை
    X

    தவளக்குப்பம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை

    தவளக்குப்பம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு தில்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 57). இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் மற்றும் மகளுக்கு திருமணம் செய்து வைத்ததில் மூர்த்திக்கு கடன் ஏற்பட்டது.

    மீன்பிடி தொழில் மூலம் கடனை அடைத்து விடலாம் என்று மூர்த்தி முயற்சி செய்து வந்த வேளையில் மீன்பிடி தொழிலும் கைகூட வில்லை. இதனால் கடனை அடைக்க முடியாமல் மூர்த்தி சிரமப்பட்டு வந்தார்.

    இதனால் மனமுடைந்த மூர்த்தி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று மாலை வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் தூக்குபோட்டு தொங்கினார்.

    உடனே அவரது குடும்பத்தினர் மூர்த்தியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×