என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் விவசாயி பலி
Byமாலை மலர்14 Sep 2017 11:45 AM GMT (Updated: 14 Sep 2017 11:45 AM GMT)
சங்கரன்கோவில் அருகே பைக் விபத்தில் படுகாயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தாலுகா ஆராய்ச்சிபட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 57). விவசாயி. இவரும் இவரின் மருமகன் கனகராசும் (37) சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு செல்வதற்காக சங்கரன்கோவில் -நெல்லை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை தங்கப்பாண்டி ஓட்டி சென்றுள்ளார்.
பனவடலிசத்திரம் அருகே பைக் சென்ற போது முன்னால் சென்ற ஜீப் திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் பின்னால் வந்த தங்கப்பாண்டி ஜீப்பின் பின்பக்கம் மோதியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பாளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் ஜீப்பை ஓட்டி வந்த சுப்புலாபுரத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் சிவஞானத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்கரன்கோவில் தாலுகா ஆராய்ச்சிபட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 57). விவசாயி. இவரும் இவரின் மருமகன் கனகராசும் (37) சங்கரன்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு ஊருக்கு செல்வதற்காக சங்கரன்கோவில் -நெல்லை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை தங்கப்பாண்டி ஓட்டி சென்றுள்ளார்.
பனவடலிசத்திரம் அருகே பைக் சென்ற போது முன்னால் சென்ற ஜீப் திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது. இதனால் பின்னால் வந்த தங்கப்பாண்டி ஜீப்பின் பின்பக்கம் மோதியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு பாளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் ஜீப்பை ஓட்டி வந்த சுப்புலாபுரத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் சிவஞானத்திடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X