என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் விடிய-விடிய போராட்டம்
Byமாலை மலர்14 Sep 2017 10:35 AM GMT (Updated: 14 Sep 2017 10:35 AM GMT)
பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
சேலம்:
பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டிடத்தில் பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
பின்னர் அங்கேயே சமைத்து சாப்பிட்ட அவர்கள் விடிய-விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
2-வது நாளாக இன்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், அதுவரை பணிக்கு செல்லமாட்டோம் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர்.
பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் தமிழகம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கட்டிடத்தில் பந்தல் அமைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.
பின்னர் அங்கேயே சமைத்து சாப்பிட்ட அவர்கள் விடிய-விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
2-வது நாளாக இன்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும், அதுவரை பணிக்கு செல்லமாட்டோம் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உறுதியாக தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X