search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே ரூ.39 லட்சம் முறைகேடு: ஊராட்சி செயலர் கைது
    X

    காஞ்சீபுரம் அருகே ரூ.39 லட்சம் முறைகேடு: ஊராட்சி செயலர் கைது

    காஞ்சீபுரம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரின் கையெழுத்தினை போட்டு ரூ.39 லட்சம் முறைகேடு செய்த ஊராட்சி செயலரை போலீசார் கைது செய்தனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்திற் குட்பட்ட பச்சம்பாக்கம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரின் கையெழுத்தினை போட்டு 39.25 லட்ச ரூபாய் வங்கியில் இருந்து முறைகேடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

    விசாரணையில் ஊராட்சி செயலர் சந்தோஷ்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

    இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சந்தோஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×