என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி, மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
Byமாலை மலர்14 Sep 2017 4:00 AM GMT (Updated: 14 Sep 2017 4:00 AM GMT)
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நேற்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
சென்னை:
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி இன்று (நேற்று) என்னை எனது இல்லத்தில் சந்தித்தார். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையிலிருந்து ‘பாரத யாத்திரை’ தொடங்கியிருக்கும் அவர் 35 வருடங்களுக்கும் மேலாக ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற இயக்கத்தை ஓய்வின்றி நடத்தி வருகிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நடத்தும் இந்த யாத்திரை இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.
‘குழந்தைகள் மீதான அனைத்து வகை குற்றங்களுக்கும் எதிரான போர்’ என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கியுள்ள ‘பாரத யாத்திரையின்’ வழி நெடுகிலும் ‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்’ என்ற 5 முழக்கங்களை ஒரு கோடி மக்கள் உறுதிமொழியாக எடுக்க வைக்கப்போ கிறார் என்பது வரவேற்கத்தக்கது.
‘கல்வி பெறுவது’ குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி கண்ட கைலாஷ் சத்யார்த்தி ‘கன்னியாகுமரி முதல் டெல்லி’ வரை நடைபெறும் இந்த பாரத யாத்திரை மூலமும் வெற்றி பெறுவார் என்பதில் நம்பிக்கையிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, ‘உலகமே குழந்தைகளின் நண்பனாக இருக்கவேண்டும்’ என்ற அவரது உயர்ந்த நோக்கம் பாரத யாத்திரையின் மூலம் நிறைவேறுவதற்கு தி.மு.க. சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி இன்று (நேற்று) என்னை எனது இல்லத்தில் சந்தித்தார். கன்னியாகுமரியில் உள்ள சுவாமி விவேகானந்தர் பாறையிலிருந்து ‘பாரத யாத்திரை’ தொடங்கியிருக்கும் அவர் 35 வருடங்களுக்கும் மேலாக ‘குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற இயக்கத்தை ஓய்வின்றி நடத்தி வருகிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்து மதத்தினரையும் அரவணைத்து நடத்தும் இந்த யாத்திரை இந்திய நாட்டின் பன்முகத்தன்மைக்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்திருக்கிறது.
‘குழந்தைகள் மீதான அனைத்து வகை குற்றங்களுக்கும் எதிரான போர்’ என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கியுள்ள ‘பாரத யாத்திரையின்’ வழி நெடுகிலும் ‘குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும்’ என்ற 5 முழக்கங்களை ஒரு கோடி மக்கள் உறுதிமொழியாக எடுக்க வைக்கப்போ கிறார் என்பது வரவேற்கத்தக்கது.
‘கல்வி பெறுவது’ குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற போராட்டத்தில் ஏற்கனவே வெற்றி கண்ட கைலாஷ் சத்யார்த்தி ‘கன்னியாகுமரி முதல் டெல்லி’ வரை நடைபெறும் இந்த பாரத யாத்திரை மூலமும் வெற்றி பெறுவார் என்பதில் நம்பிக்கையிருக்கிறது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு, ‘உலகமே குழந்தைகளின் நண்பனாக இருக்கவேண்டும்’ என்ற அவரது உயர்ந்த நோக்கம் பாரத யாத்திரையின் மூலம் நிறைவேறுவதற்கு தி.மு.க. சார்பில் மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X