search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி விழுப்புரத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி விழுப்புரத்தில் தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை விழுப்புரம் மத்திய மாவட்ட, தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    விழுப்புரம்:

    நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை விழுப்புரம் மத்திய மாவட்ட, தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் அமைச் சரும், மத்திய மாவட்ட தி.மு.க.செயலாளருமான பொன்முடி எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான அங்கையற்கண்ணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    முன்னதாக மாணவி அனிதாவின் உருவபடத் துக்கு பொன்முடி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்கராபுரம் எம்.எல்.ஏ.உதயசூரியன், மாவட்ட அவைத்தலை வரும், எம்.எல்.ஏ.வுமான ராதாமணி, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., விழுப்புரம் மத்திய, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.டி.வி.சீனுவாசகுமார், தெற்கு மாவட்ட தலைவர் ஜெயகணேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன் ஏழுமலை, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்கள் ஆற்றலரசு, தனபால், பாமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் அமீர் அபாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஸ்தாபின், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாவட்ட தி.மு.க.நிர்வாகிகள் புகழேந்தி, ஜெயசந்திரன், டாக்டர் முத்தையன், ஜனகராஜ், இளைஞரணி செயலாளர் தினகரன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, முருகன், கல்பர்ட் ராஜா, நகர நிர்வாகிகள் புருஷோத்தமன், கற்பகமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய மாநில அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×