search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி - பெண் தற்கொலை
    X

    வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி - பெண் தற்கொலை

    வெள்ளக்கோவிலில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் மோசடி செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் மூலனூர் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ஈஸ்வரி (வயது 50). இவர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி பணம் வசூல் செய்தார். கடந்த 3 ஆண்டுகளாக இதுபோல் பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக தெரிகிறது.

    இதற்கிடையே பணம் கொடுத்த பொதுமக்கள், வங்கியில் கடன் வாங்கி கொடுக்காததால் ஈஸ்வரியிடம் கேட்டனர். இதற்கு அவர் சாக்குபோக்கு சொல்லி சமாளித்து வந்தார். மாதக்கணக்கில் ஈஸ்வரி இதுபோல் சொல்லி வந்ததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொதுமக்கள் உணர்ந்தனர். இதனால் வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே வீட்டில் இருந்த ஈஸ்வரி வீட்டில் வைத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது கணவர் ராமசாமி வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×