search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுகுடித்து விட்டு வாகனத்தில் விபத்து ஏற்படுவது தடுக்கப்படுமா?
    X

    மதுகுடித்து விட்டு வாகனத்தில் விபத்து ஏற்படுவது தடுக்கப்படுமா?

    மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் மதுவால் ஏற்படும் விபத்துக்கள் தடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளான கரகூர், திருமல்வாடி கூட்டுரோடு, பெல்ரம்பட்டி, திருமல்வாடி, 5-வது மையில்கல், மல்லாபுரம் கூட்டு ரோடு ஆகிய கிராம பகுதியில் 24 மணி நேரமும் அரசு மதுபான கடைக்கு நிகராக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகின்றது. இதனால் மது குடித்துவிட்டு வாகனத்தில் செல்லுபவர்களால் அதிக விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகின்றது.

    மது விற்பனை குறித்து பலமுறை மாரண்டஅள்ளி போலீசாருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இனி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×