search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு மூளை ஆபரேசன் நடந்தபோது வீடியோ கேம் விளையாடினார்
    X

    சென்னை ஆஸ்பத்திரியில் சிறுமிக்கு மூளை ஆபரேசன் நடந்தபோது வீடியோ கேம் விளையாடினார்

    சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் 10 வயது சிறுமிக்கு மூளை ஆபரேசன் செய்யப்பட்டபோது, வழக்கமான செயல்பாட்டுடன் இருக்கும் வகையில் அவர் வீடியோ கேம் விளையாடியுள்ளார்.
    சென்னை:

    சென்னையை சேர்ந்த 10 வயது சிறுமி நந்தினி. 5-ம் வகுப்பு படிக்கிறாள். பரதநாட்டிய கலைஞரும் கூட. அவளுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

    இதனால் பதறி துடித்த பெற்றோர் அவரை வடபழனியில் உள்ள ‘சிம்ஸ்’ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் ரூபேஸ் குமார் ‘ஸ்கேன்’ செய்து பார்த்தார்.

    அப்போது அவளது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. அதை அகற்றாவிடில் உடலின் பாதி பகுதி செயலிழந்துவிடும். அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே உடனடியாக ஆபரேசன் நடத்த வேண்டும் என பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பெற்றோரின் சம்மதத்தை தொடர்ந்து சிறுமிக்கு ஆபரேசன் நடத்தப்பட்டது. பொதுவாக மூளையில் ஆபரேசன் நடைபெறும் போது மருந்து கொடுத்து மண்டை ஓடு அகற்றப்பட்டு கட்டி அகற்றப்படும் அல்லது ஆபரேசன் செய்யும்போது ஒருவேளை தவறான நரம்பின் மீது கை பட்டால் கூட உடலில் வலிப்பு ஏற்பட்டு பாதி பகுதி செயலிழந்துவிடும்.

    எனவே டாக்டர் ரூபேஸ்குமார் அந்த முறையை கையாளாமல் மயக்க மருந்து கொடுக்காமல் சிறுமியை விழிப்புடனும், வழக்கமான செயல்பாட்டுடன் இருக்க செய்தும் ஆபரேசன் செய்தனர்.

    மூளை கட்டி ஆபரேசன் நடத்த போது சிறுமி நந்தினி தனது மாமாவின் ‘ஸ்மார்ட்’ செல்போன் மூலம் தனக்கு மிகவும் விருப்பமான ‘வீடியோ கேம்’ விளையாடிக் கொண்டிருந்தாள்.

    ஆபரேசன் செய்த டாக்டருடன் பேசிக் கொண்டும் கை கால்களை அசைத்துக் கொண்டும் இருந்தாள். இந்த ஆபரேசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்போது டாக்டருடன் அவரது மாமாவும் உடன் இருந்தார். புதுச்சேரியை சேர்ந்த இவரும் ஒரு டாக்டர் தான்.

    பொதுவாக இது போன்ற ஆபரேசன் 2 சதவீதம் நோயாளிகள் அதுவும் பெரியவர்களுக்கு தான் நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு மிக அரிதாக இத்தகைய ஆபரேசன் நடைபெறும். அது சிறுமிக்கு செய்யப்பட்டுள்ளது. இதனை ‘சிம்ஸ்’ ஆஸ்பத்திரியின் நரம்பியல் நிபுணர் டைரக்டர் டாக்டர் சுரேஷ் பாபு தெரிவித்தார்.

    மூளை கட்டி ஆபரேசனின் போது நோயாளிகளுக்கு வலி எதுவும் தெரியாது. பொதுவாக மூளை தான் உடலில் ஏற்படும் வலியை தெரிவிக்கும் ஒரு கருவி. ஆனால் கட்டி இருப்பதால் மூளை நரம்பின் வலியை உடலுக்கு கடத்தாது, என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×