search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் கொட்டிய மழை
    X

    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் கொட்டிய மழை

    ஈரோடு மாவட்ட அணை பகுதிகளில் கன மழை கொட்டி வருகிறது.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டத்தில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஒருசில இடங்களில் பலத்த மழையும், மிதமான மழையும் பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரி பள்ளம் அணைப்பகுதியில் 29 மி.மீ. மழை பெய்தது.

    டி.என்.பாளையம் அருகே உள்ள விளாங்கோம்பை வனப்பகுதியில் குண்டேரி பள்ளம் அணை உள்ளது. இந்த அணைபகுதியில் நேற்று மழை பெய்தாலும் குண்டேரிபள்ளம் அணைக்கு தண்ணீர் வரவில்லை.

    இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 42 அடி தற்போது அணையில் 23.2 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. கடம்பூர் மற்றும் குன்றிமலை பகுதியில் கனமழை பெய்தால் மட்டுமே குண்டேரி பள்ளம் அணைக்கு தண்ணீர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று 26மி.மீ. மழை பெய்தது. மேலும் பவானிசாகர் கொடிவேரி அணை, சென்னிமலை பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

    ஈரோட்டில் மழை பெய்வதுபோல் கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தாலும் லேசான சாரல் மழையுடன் நின்றுவிட்டது.
    Next Story
    ×