search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை பலி
    X

    குடிநீர் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை பலி

    கோவை பேரூர் அருகே குடிநீர் தொட்டியில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை பரிதாபமாப உயிரிழந்தது.
    கோவை:

    பேரூர் அருகே உள்ள குப்பனூரை சேர்ந்தவர் ஆறுசாமி (வயது 38). கூலி தொழிலாளி. இவரது மகள் மகதி(வயது 2).

    நேற்று மாலை வீட்டு முன்பு மகதி விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக குடிநீர் தொட்டிக்குள் தவறி விழுந்தாள்.

    குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்த தாய் மகேஷ்ராணி தேடிச் சென்ற போது குடிநீர் தொட்டிக்குள் குழந்தை கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அவர் குழந்தையை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×