search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே நிலத்தகராறில் காண்டிராக்டர் மீது தாக்குதல்
    X

    போடி அருகே நிலத்தகராறில் காண்டிராக்டர் மீது தாக்குதல்

    போடி அருகே நிலத்தகராறில் காண்டிராக்டர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    போடி அருகே சிலமலை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29) காண்டிராக்டர். இவரது தந்தை தவமணிக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கும் நிலத்தகராறில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று முத்துச்சாமி, அவரது மகன் கிருபாகரன் உள்பட 4 பேர் தவமணி வீட்டுக்கு சென்று தந்தை, மகன் 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயம் அடைந்த ஆனந்த் போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போடி தாலுகா போலீசார் கிருபாகரன், முத்துச்சாமி, ரஞ்சித் ஆகியோரை கைது செய்தனர்.

    தேவாரம் அருகே டி.சிந்தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (65). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவருக்கும் நிலப்பிரச்சினையில் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கன்னிமார் குளம் அருகே சென்றுகொண்டிருந்த சின்னப்பனை அந்தோணி மகன் பிச்சை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×