search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் களரம்பட்டியில் சந்து கடையில் மது வாங்கி குடித்த வெள்ளி பட்டறை தொழிலாளி பலி
    X

    சேலம் களரம்பட்டியில் சந்து கடையில் மது வாங்கி குடித்த வெள்ளி பட்டறை தொழிலாளி பலி

    சேலம் களரம்பட்டியில் சந்து கடையில் மது வாங்கி குடித்த வெள்ளி பட்டறை தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 36). வெள்ளி பட்டறை தொழிலாளி.

    இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு சந்து கடையில் மது வாங்கி குடித்தார். பின்னர் திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வரதராஜன் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது சந்து கடையில் வாங்கி குடித்த மதுவில் ஏதாவது வி‌ஷப்பொருட்கள் கலக்கப்பட்டதா? அல்லது அதிகமாக மது குடித்ததால் அவர் இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பலியான வரதராஜனுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×