search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை
    X

    சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளை

    சேலம் அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 36 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த வெடிக்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 40), கட்டிட தொழிலாளி. இவர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். நேற்றிரவு 7 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது வீட்டு கதவின் பூட்டும், பீரோ பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டில் இருந்த 36 பவுன் நகை, 55ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து அவர் கொளத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார்.

    Next Story
    ×