என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விமானம், ரெயில் நிலையங்களில் ரசாயன தாக்குதல் நடத்த சதி: தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்11 Sep 2017 3:08 AM GMT (Updated: 11 Sep 2017 3:08 AM GMT)
விமானம், ரெயில் நிலையங்களில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை:
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் விமானத்தில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டிய சதித்திட்டம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. அதேபோன்று, இந்தியாவில் விமானம், ரெயில்கள் போன்றவற்றில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, கொடிய நச்சு வாயுக்களை உருவாக்குவதே ரசாயன தாக்குதல் ஆகும். விமானம், மெட்ரோ ரெயில் போன்ற மூடப்பட்ட கதவுகளைக் கொண்ட வாகனங்களில், இந்த நச்சு வாயுக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இந்த கொடிய நச்சு வாயுக்களை உருவாக்க ரசாயன பவுடர், பூச்சிக்கொல்லி மருந்து, திராவகம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இப்பொருட்களை மருந்துகள், குளிர் பானங்கள், வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள் என்ற போர்வையில் விமானம் மற்றும் மெட்ரோ ரெயிலுக்குள் எடுத்துச்சென்று கொடிய நச்சு வாயுக்களை உருவாக்க முடியும்.
எனவே, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பொறுப்பில் உள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் இத்தகைய பொருட்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில், அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களையும் மத்திய உளவுத்துறை உஷார்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் விமானம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் விமானத்தில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் தீட்டிய சதித்திட்டம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் முறியடிக்கப்பட்டது. அதேபோன்று, இந்தியாவில் விமானம், ரெயில்கள் போன்றவற்றில் ரசாயன தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஹார்டுவேர் கடைகளில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, கொடிய நச்சு வாயுக்களை உருவாக்குவதே ரசாயன தாக்குதல் ஆகும். விமானம், மெட்ரோ ரெயில் போன்ற மூடப்பட்ட கதவுகளைக் கொண்ட வாகனங்களில், இந்த நச்சு வாயுக்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
இந்த கொடிய நச்சு வாயுக்களை உருவாக்க ரசாயன பவுடர், பூச்சிக்கொல்லி மருந்து, திராவகம் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
இப்பொருட்களை மருந்துகள், குளிர் பானங்கள், வீட்டை சுத்தப்படுத்தும் பொருட்கள் என்ற போர்வையில் விமானம் மற்றும் மெட்ரோ ரெயிலுக்குள் எடுத்துச்சென்று கொடிய நச்சு வாயுக்களை உருவாக்க முடியும்.
எனவே, பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் பொறுப்பில் உள்ள அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் இத்தகைய பொருட்களை கண்டறிந்து தடுக்க வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விஷயத்தில், அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.க்களையும் மத்திய உளவுத்துறை உஷார்படுத்தி உள்ளது.
இதையடுத்து, தமிழ்நாட்டில் விமானம், ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகளின் உடைமைகள் பலத்த சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X