search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்
    X

    ஆண்டிப்பட்டி அருகே கோவில் விழாவில் கோஷ்டி மோதல்

    ஆண்டிப்பட்டி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 8 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி(வயது27). அதேபகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின்போது வைகையாற்றில் இருந்து பெட்டி எடுத்து வந்தனர். அப்போது தங்கபாண்டி மற்றும் அறிவழகன், வினோத் ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் தங்கபாண்டியை தாக்கினர். இதை தடுக்க வந்த உறவினர் முருகன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரும் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து க.விலக்கு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அறிவழகன், வினோத் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×