என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி, அரியலூரில் பலத்த மழை - சாலைகளில் வெள்ளப்பெருக்கு
Byமாலை மலர்6 Sep 2017 4:05 PM GMT (Updated: 6 Sep 2017 4:05 PM GMT)
திருச்சி- அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி:
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர பகுதியில் நேற்று மதியம் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இரவு 7-30 மணி வரை இதே நிலை நீடித்தது.
பின்னர் லேசான மழை தூறல் விழுந்தது. இரவு 8 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது. நள்ளிரவு வரை மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.
இந்த மழையால் மேலப்புதூர் சுரங்க பாதை, மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், அய்யப்பன் கோவில், தில்லை நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழைபெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அரியலூர் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள மாங்காய் பிள்ளையார் கோவில் சாலையிலும் அதன் பின்புறம் உள்ள காளியம்மன் கோவில் சாலையிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. திருச்சி மாநகர பகுதியில் நேற்று மதியம் வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. இரவு 7-30 மணி வரை இதே நிலை நீடித்தது.
பின்னர் லேசான மழை தூறல் விழுந்தது. இரவு 8 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது. நள்ளிரவு வரை மழை தூறல் விழுந்து கொண்டே இருந்தது.
இந்த மழையால் மேலப்புதூர் சுரங்க பாதை, மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், அய்யப்பன் கோவில், தில்லை நகர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கன மழைபெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அரியலூர் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள மாங்காய் பிள்ளையார் கோவில் சாலையிலும் அதன் பின்புறம் உள்ள காளியம்மன் கோவில் சாலையிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X