search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது
    X

    கடலூரில் புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது

    கடலூர் மாவட்டத்தில் புழக்கத்துக்கு வந்த 50 ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்கள் வங்கியில் பெற்று சென்றனர்.
    கடலூர்:

    புதிதாக 50, 200 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த ரூபாய் நோட்டுகள் சென்னையில் மட்டும் முதலில் புழக்கத்துக்கு வந்தது. தற்போது மற்ற மாவட்டங்களுக்கும் ரிசர்வ் வங்கி அனுப்பி வருகிறது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கிகளுக்கு ரூ.50 லட்சம் புதிய 50 ரூபாய் நோட்டுகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் மாவட்டத்தில் உள்ள 39 இந்தியன் வங்கி கிளைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

    அந்த நோட்டுகள் நேற்று முதல் கடலூரில் புழக்கத்துக்கு வந்தது. இதை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் பெற்று சென்றனர்.
    Next Story
    ×