என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காஷ்மீரில் தமிழக ராணுவ வீரர் மின்சாரம் தாக்கி பலி
சாயல்குடி:
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 34). ராணுவ வீரர்.
இவர் காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் உள்ள எல்லை முகாமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
முகாமில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் வாசுதேவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இவருக்கு சரண்யா என்ற மனைவியும், 3 வயதில் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
வாசுதேவன் இறந்த தகவலை ராணுவ அதிகாரிகள் சரண்யாவுக்கு தெரிவித்தனர். வாசுதேவன் மரணச்செய்தி கேட்டு தத்தங்குடி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
வாசுதேவனின் உடல் விமானம் மூலம் நாளை மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் மரியாதை செலுத்துகிறார்கள். அதன் பின்னர் வாசுதேவனின் உடல் ராணுவ வாகனத்தில் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கிராம மக்கள் மரியாதை செலுத்திய பின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்