search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கனூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
    X

    திருக்கனூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

    திருக்கனூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருக்கனூர்,:

    திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (38)கூலித்தொழிலாளி. மதுகுடிக்கும் பழக்கத்தினால் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தும் நோய் குணமாகவில்லை. இந்த நிலையில் நேற்று நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த சிவக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட சிவக்குமாருக்கு புனிதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×