search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    விருதுநகர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

    விருதுநகர் மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    விருதுநகர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஏமாற்றி வந்த மழை நேற்று கொட்டித்தீர்த்தது.

    நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலை 8 மணி வரை நீடித்தது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருச்சுழி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியது. பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    Next Story
    ×