என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோபி அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை
கோபி:
கோபி அருகே உள்ள தெற்குபதி, எழத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவரது மனைவி சுகன்யா என்கிற சுகுமாரி (வயது 27).
இவர்கள் 2 பேரும் திருப்பூரில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்தனர். அப்போது அவர்கள் காதல் வயப்பட்டனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 12-3-2014 அன்று திருமணம் நடந்தது.
2 வயதில் நிவாஸ் என்ற மகன் உள்ளார். ஈஸ்வர மூர்த்தி குடித்துவிட்டு வந்து சுகன்யாவிடம் தகராறு செய்து வருவாராம். இதனால் சுகன்யா கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவார்.
பின்னர் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். இது தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 28-ந் தேதியும் தகராறு ஏற்பட்டது. இரவில் அனைவரும் தூங்க சென்றனர்.
மறுநாள் அதிகாலை குழந்தை நிவாஸ் அழும் சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வர மூர்ததி எழுந்து பார்த்தார். அப்போது சுகன்யா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுகன்யாவின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுபற்றி டி.எஸ்.பி. செல்வம் விசாரித்தார். சுகன்யாவுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்