search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அரிசிபாளையத்தில் லாரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை
    X

    சேலம் அரிசிபாளையத்தில் லாரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை

    சேலம் அரிசிபாளையத்தில் லாரி அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அரிசிபாளையம், ஆர்.டி.பால் தெருவை சேர்ந்தவர் சம்பத். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் வைத்து, லாரிகளை இயக்கி தொழில் நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பத்தும், அவரது மனைவி தேவகியும் திருப்பதிக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்த அவர்கள் இன்று காலை வீட்டுக்கு திரும்பினர்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் வீடு முழுவதும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்க பணமும் திருட்டுபோய் இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து யாரோ மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த சம்பத் சேலம் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு சென்று பீரோ மற்றும் கதவில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் பழைய கொள்ளையர்களின் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து ஆய்வு நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×