search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெ.தீபா பேரவை செயல்வீரர்கள் கூட்டம்
    X

    ஜெ.தீபா பேரவை செயல்வீரர்கள் கூட்டம்

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர்-அம்மா- ஜெ.தீபா பேரவை சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர்-அம்மா- ஜெ.தீபா பேரவை சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெ.தீபா பேரவை செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செந்துறை குமார், ஆண்டிமடம் தர்மலிங்கம், ஜெயங்கொண்டம் கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாநகர, மாவட்ட செயலாளர் கோபி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவோடும், ஆலோசனையோடும் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    தமிழக மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை பற்றி தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையை மாற்றக்கூடிய ஒரே தலைவர் ஜெ.தீபா மட்டும் தான். விரைவில் தமிழகத்தில் தீபா தலைமையில் நல்ல ஆட்சி அமையும் என்றார். கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகமும் நடைபெற்றது.
    Next Story
    ×