என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெ.தீபா பேரவை செயல்வீரர்கள் கூட்டம்
Byமாலை மலர்26 Aug 2017 4:22 PM GMT (Updated: 26 Aug 2017 4:22 PM GMT)
அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர்-அம்மா- ஜெ.தீபா பேரவை சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர்-அம்மா- ஜெ.தீபா பேரவை சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெ.தீபா பேரவை செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செந்துறை குமார், ஆண்டிமடம் தர்மலிங்கம், ஜெயங்கொண்டம் கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாநகர, மாவட்ட செயலாளர் கோபி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவோடும், ஆலோசனையோடும் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை பற்றி தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையை மாற்றக்கூடிய ஒரே தலைவர் ஜெ.தீபா மட்டும் தான். விரைவில் தமிழகத்தில் தீபா தலைமையில் நல்ல ஆட்சி அமையும் என்றார். கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகமும் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர்-அம்மா- ஜெ.தீபா பேரவை சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் மாவட்ட செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெ.தீபா பேரவை செந்தில்குமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மணிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் செந்துறை குமார், ஆண்டிமடம் தர்மலிங்கம், ஜெயங்கொண்டம் கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மாநகர, மாவட்ட செயலாளர் கோபி பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் மத்திய அரசின் ஆதரவோடும், ஆலோசனையோடும் தான் ஆட்சி நடைபெற்று வருகிறது.
தமிழக மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை பற்றி தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையை மாற்றக்கூடிய ஒரே தலைவர் ஜெ.தீபா மட்டும் தான். விரைவில் தமிழகத்தில் தீபா தலைமையில் நல்ல ஆட்சி அமையும் என்றார். கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் அறிமுகமும் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X