search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் தாய் - தந்தையை இழந்த குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
    X

    விபத்தில் தாய் - தந்தையை இழந்த குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

    சாலை விபத்தில் தாய் தந்தையை இழந்த குடும்பத்துக்கு ரூ. 26.17 லட்சம் இழப்பீடு வழங்க கும்பகோணம் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் மானம்பாடி நெடுங்கொல்லை காலனித் தெருவைச் சேர்ந்தவர்கள் குணசேகரன் (40). அவரது மனைவி விஜயலெட்சுமி (35). இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

    கடந்த 18.6.15 அன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கும்பகோணத்திலிருந்து வீட்டுக்கு சென்றபோது, கும்பகோணம் சென்னை சாலையில் மாஸ் கல்லூரி அருகே டூரிஸ்ட் வேன் மோதியதில் இருவரும் அதே இடத்தில் இறந்தனர்.

    இதையடுத்து குணசேகரனின் மகன் சிவா அவரது தம்பி ராஜூ, தங்கை திவ்யா, பாட்டி அன்னக்கிளி ஆகியோர் கும்பகோணம் கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி தாய் தந்தையை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 26 லட்சத்து, 17 ஆயிரத்து, 824 இழப்பீடை கடலூர் நே‌ஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
    Next Story
    ×