search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
    X

    செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

    வாகன ஓட்டிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்கவும் உயிரிழப்புக்களை தடுக்கவும் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதாக 9500 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் தங்களின் அசல் ஓட்டுனர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

    தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் சிறப்பாக உள்ளன. நெடுஞ்சாலைகள் சிறப்பாக இருப்பதால் வேகம் அதிகரித்து விபத்து ஏற்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×