என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலத்தில் நர்சிங் மாணவி உள்பட 2 பேர் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்22 Aug 2017 12:52 PM GMT (Updated: 22 Aug 2017 12:52 PM GMT)
சேலத்தில் நர்சிங் மாணவி உள்பட 2 பேர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மளசி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அம்சவள்ளி (வயது 18). இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். நேற்று அவர் தங்கியிருக்கும் அறையில் மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்த சக மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அவரிடம் விசாரித்தபோது, தங்களது மருத்துவ கல்லூரியில் உள்ள குறைகள் குறித்து யாரும் தங்களிடம் கேட்பதில்லை என்றும், குறைகளை களைய எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் 10 தூக்க மாத்திரைகளை தான் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சத்யா (வயது 15).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல அவர் மறுத்ததால் தாய் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மளசி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் அம்சவள்ளி (வயது 18). இவர் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். நேற்று அவர் தங்கியிருக்கும் அறையில் மயங்கி கிடந்தார்.
இதைப்பார்த்த சக மாணவிகள் கொடுத்த தகவலின் பேரில் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் அவரிடம் விசாரித்தபோது, தங்களது மருத்துவ கல்லூரியில் உள்ள குறைகள் குறித்து யாரும் தங்களிடம் கேட்பதில்லை என்றும், குறைகளை களைய எந்தவித நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் 10 தூக்க மாத்திரைகளை தான் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து மருத்துவ கல்லூரி உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அம்மாப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சத்யா (வயது 15).
இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளிக்கு செல்ல அவர் மறுத்ததால் தாய் கண்டித்தாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X