search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
    X

    புதுச்சேரி அருகே மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

    வியாபாரியின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெயின்போ நகர் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சத்ய நாராயணன் (வயது 41). வியாபாரி. இவர் நேற்று மி‌ஷன் வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ரூ. 1 லட்சம் ரொக்க பணத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு வங்கி எதிரே உள்ள பகோடா கடைக்கு சென்றார்.

    பின்னர் பகோடா வாங்கி கொண்டு திரும்பிய போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் வங்கியில் பணம் எடுத்து வருவதை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

    பணத்தை பறி கொடுத்த சத்யநாராயணன் இது குறித்து பெரியகடை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுவையில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு லாஸ்ப்பேட்டை அவ்வை நகரை சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் லாசர் நகை கடையில் 2½ பவுன் தங்க காசுகளை வாங்கி மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து கொண்டு நேரு வீதிக்கு வந்தார். அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காப்பி குடித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகையை திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×