என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விராட்டிப்பத்தில் பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்22 Aug 2017 10:55 AM GMT (Updated: 22 Aug 2017 10:55 AM GMT)
பல்கலைக்கழக அதிகாரி வீட்டில் புகுந்து 25 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை அருகே உள்ள விராட்டிப்பத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது51). மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது வீடு விராட்டிப்பத்தில் தேனி மெயின்ரோட்டில் உள்ளது.
சம்பவத்தன்று இவரது மனைவியும், மகளும் ஆத்திக் குளத்தில் உள்ள மாமியார் வீட்டுககு சென்று விட்டனர். அழகர்சாமி கொடுமுடி கோவிலுக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X