search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆவடி அருகே ஆட்டோவில் போதை பொருள் கடத்திய 2 பேர் கைது
    X

    ஆவடி அருகே ஆட்டோவில் போதை பொருள் கடத்திய 2 பேர் கைது

    ஆவடி அருகே ஆட்டோவில் போதை பொருள் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    திருநின்றவூர்:

    தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, மாவா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் ரகசியமாக சிலர் விற்று வருகிறார்கள். இதையடுத்து அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி போதை பொருட்களை கைப்பற்றி வருகிறார்கள்.

    மாவா போன்ற போதை பொருட்களை வீட்டிலேயே தயாரித்து விற்று வருவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார் அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆவடியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அதில் 15 கிலோ மாவா போதைப் பொருள் கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த கொடுங்கையூர் அன்னை சத்யா நகரை சேர்ந்த வரதராஜன், முருகன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் மாவாவை ஆவடிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×